29.8 C
Jaffna
March 29, 2024
இந்தியா உலகம்

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி; ஐரோப்பிய நாடுகளில் அங்கீகரிப்பு!

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. மேலும் கோவிஷீல்டு தடுப்பூசி ஐரோப்பிய மருந்துகள் நிறுவனதின் (EMA) ஒப்புதலுக்காகவும், கோவாக்சின் தடுப்புசி உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒப்புதலுக்காகவும் காத்திருக்கின்றது .இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த இரு தடுப்பூசிகளையும் அங்கீகரிக்க தொடங்கியுள்ளது.மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்த இரு தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை போட்டுக்கொண்ட இந்திய பயணிகள் நாட்டிற்குள் எந்தவொரு கட்டுப்பாடுகள் இல்லாமல் அனுமதிக்கப்படுவர்.

இதையடுத்து சீரம் நிறுவனத்தின் அஸ்ட்ராஜெனேகா மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அயர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த தடுப்பூசியை ஏற்றுக்கொண்டுள்ளார். இதைதொடர்ந்து சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்ட இந்திய பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது .மேலும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு எஸ்டோனியா அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள…” – சினிமா வசனம் பேசி விஜய பிரபாகரன் வாக்கு சேகரிப்பு

Pagetamil

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கேஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் விசாரிக்க அனுமதி

Pagetamil

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

Leave a Comment