28 C
Jaffna
December 5, 2023
இலங்கை

வவுனியாவில் காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவனின் மாதிரிகள் மொரட்டுவைக்கு அனுப்பி வைப்பு: சடலத்தை புதைக்குமாறு கூறி பெற்றோரிடம் ஒப்படைப்பு

வவுனியாவில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மொரட்டுவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிறுவனின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும், கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் நேற்று (06) காலை சடலமாக மீட்கப்பட்டார். சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்ட பொலிசார் வவுனியா தடவியல் பொலிஸாரின் உதவியுடன் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிறுவனின் சடலத்திற்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் வவுனியா சட்ட வைத்திய அதிகாரி ஈ.ஜி.யூ.என்.குணரட்ண மற்றும் பொலிசார் முன்னிலையில் பிரேத பரிசோதனைக்கள் இடம்பெற்றிருந்தன.

இருப்பினும், மேலதிக தகவல்கள் தேவைப்பட்டமையால் சிறுவனின் உடல் கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மொரட்டுவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளமையால் உடலை எரியூட்டாமல் புதைக்கவேன்டும் என சட்ட வைத்திய அதிகாரியால் தெரிவிக்கப்பட்டு சடலம், பெபெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புதுமுறிப்பு குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுப்பு வலை

Pagetamil

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

வவுனியாவில் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்: உயர்தர மாணவி தப்பியோட்டம்!

Pagetamil

யாழில் பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம்: வாள்வெட்டுக்குழு தப்பியோட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!