திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாயா நகர் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (07) மதியம் 12.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
குச்சவெளி-ஜாயாநகர் பகுதியைச் சேர்ந்த இமாம்தீன் அஷ்மீர் (26) என்பவரே உயிரிழந்துள்ளார்.
டைனமைட் வெடி பொருளை பயன்படுத்தி மூவர் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, டைனமட் வெடித்ததில் அவர் உயிரிழந்துள்ளார்..
உயிரிழந்த நபரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுர்.




