25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

மன்னாரில் தடுப்பூசி பெறுவதில் மக்கள் ஆர்வம்

மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை 2 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிக எண்ணிக்கையான மக்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர்.

மன்னார் ஆடைத் தொழிற்சாலை பிரதான வீதியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் தடுப்பூசி 2 ஆவது நாளாகவும் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கிராம அலுவலகர் பிரிவுகள் ஊடாக ஒதுக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (6) நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் முருங்கன் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

Leave a Comment