பானுக ராஜபக்ஷவிற்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடை!

Date:

கிரிக்கெட் ஒப்பந்தத்தை மீறியமைக்காக பானுக ராஜபக்ஷவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இரண்டு வருடங்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சமூக ஊடகம் மற்றும் பிற ஊடக நேர்காணல்களில் தோன்றும் போது ஒப்பந்தத்தின் 2019/2020 இன் கடமைகளை மீறியுள்ளார் என்பது கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், எதிர்கால சுற்றுப்பயணங்களை மையமாகக் கொண்டு. தற்போது கொழும்பில் உயிர்குமிழி திட்டத்தின் கீழ் கொழும்பில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் 13 பேர் கொண்ட அணியில் பானுகவை உள்வாங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அவர் தேவையான உடற்தகுதியை நிரூபித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அவர் நாளை உயிர் குமிழி திட்டத்தில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு – பெருந்தொற்றுகளைத் தடுப்பதில் முக்கிய முன்னேற்றம்

எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தக்கூடிய புதிய வைரஸ்கள் மற்றும் பெருந்தொற்றுகளில் இருந்து மனிதகுலத்தைப்...

குரு-சந்திர சேர்க்கையால் உருவான சமசப்தக் யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றியும் செல்வமும் குவியுமா?

ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் ஜோதிட ரீதியாக பல சுப யோகங்கள் உருவாகி...

முச்சக்கர வண்டியின் மீது மரம் விழுந்து 3 பேர் பலி

நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்