புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டள்ளார்.
புதிய வழிகாட்டுதல்களின்படி,
மாகாணங்களிற்கிடையிலான போக்குவரத்து, எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடர்ந்து தடை செய்யப்பட்டிருக்கும்.
பொதுப்போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானவர்களே பயணிக்க முடியும். எனினும், மேல் மாகாணத்தில் ஆசன எண்ணிக்கையில் 30 வீதமானவர்களே பயணிக்க முடியும்.
தனியார் வாகனங்கள், வாடகை வாகனங்கள் முச்சக்கர வண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
திருமண நிகழ்வுகளிற்கு அனுமதியில்லை. 10 பேரின் பங்கேற்புடன் பதிவு திருமணத்தை நடத்தலாம்.
உயிரிழந்தவரின் சடலம் பொறுப்பேற்கப்பட்டு 24 மணித்தியாலயத்தில் இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட வேண்டும். 15 பேர் மாத்தரமே கலந்து கொள்ளலாம்.
திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள், நீச்சல் தடாகங்கள், மதுபான நிலையங்கள், களியாட்ட விடுதிகள், சூதாட்ட நிலையங்கள், மசாஜ் நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.