Pagetamil
இந்தியா

இனி கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் : மத்திய சுகாதாரத்துறை அனுமதி

கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்துவதற்கு அனுமதியளிக்கப்படாமல் இருந்து வந்தது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் கர்ப்பிணி பெண்களுக்கு சோர்வு அல்லது பக்கவிளைவுகள் ஏற்படாது என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆய்வு நடத்தி கூறியிருந்தனர்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய சுகாதாரத்துறை இன்று அனுமதியளித்துள்ளது. மேலும், தடுப்பூசி போடுவதற்கு கோவின் தளத்தில் முன்பதிவ செய்த பிறகு, அருகில் உள்ள தடுப்பூசி முகாம்களுக்கு நேரில் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

பிக்பாஸ் தர்ஷன் கைது!

Pagetamil

‘நான் உயிருடனும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்’ – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யானந்தா

Pagetamil

கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

மனைவியை கொன்று சூட்கேசில் மறைத்த வைத்த கணவர் கைது

Pagetamil

பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கியது தவறான தீர்ப்பு: மத்திய அமைச்சர் அதிருப்தி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!