நாய்க்கு குரல் கொடுத்த நடிகர் சூரி.. வெளியானது ‘அன்புள்ள கில்லி’ டீசர் (vedio)

Date:

மனிதன், நாய் இடையேயான நட்புறவை வைத்து வித்தியாசமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்புள்ள கில்லி’. இப்படத்தை மாறுப்பட்ட கதைக்களத்துடன் இயக்கியுள்ளார் ஸ்ரீநாத் ராமலிங்கம். நாயின் மனக்குரலில் திரைக்கதை நகர்வது போன்று இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இந்தப் படத்தில் ஒரு நாயிக்கு குரல் கொடுத்துள்ளார் நகைச்சுவை நடிகர் சூரி. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நீண்ட நாட்கள் கழித்து குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் படமாக ‘அன்புள்ள கில்லி’ உருவாகியுள்ளது. இப்படத்தில் பிரபல நடிகை ஶ்ரீரஞ்சனியின் மகன் மைத்ரேயா முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஒரு லேப்ராடர் வகை நாயும் நடிக்கிறது. மேலும் துஷாரா விஜயன், சாந்தினி தமிழரசன், மைம் கோபி, விஜே ஆஷிக், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தை ஶ்ரீதர் சாகர் மற்றும் மாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முன்னணி பதிப்பாளர் கொடகே காலமானார்

கோடகே பதிப்பகத்தின் நிறுவனர் தேசபந்து சிறிசுமன கொடகே நேற்று (29) காலமானார். அவர்...

எரான் விக்ரமரட்னவை கட்சியிலிருந்து விலகக்கோருகிறது ஐக்கிய மக்கள் சக்தி!

இலங்கை கிரிக்கெட்டின் உருமாற்றக் குழுவின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள்...

கடன் பணம் மாயம்: பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ள ஜனாதிபதி

வியாழக்கிழமையன்று பொது நிதிக் குழுவின் (COPF) முன் ஆஜராகத் தன்னால் இயலாது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்