வடமாகாணத்தில் இன்று (2) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 48 பேருக்கு தொற்று உறுதியானது.
இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 869 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இதில், யாழ் மாவட்டத்தில், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்திசாலையில் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தயசாலையில் 5 பேர், யாழ் போதனா வைத்தியசாலையில் 5 பேர் என, 24 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில், பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் அடைாளம் காணப்பட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேர், வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரவில் ஒருவர் என, 10 பேர் அடையாளம் காணப்பட்டார்.
மன்னார் மாவட்டத்தில், மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், மன்னார் பொது வைத்தியசாலையில் ஒருவர் என, 9 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
வவுனியா மாவட்டத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்.