உலகம் முக்கியச் செய்திகள்

மொடல் என்றால் விபச்சாரிதான்: நவீன ஐ.எஸ் சிறைக்குள் தற்கொலைக்கு முயன்ற மொடல் அழகி!

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஈரான் ஆதரவு ஹவுத்தி போராளிகளால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட யேமன் மொடல் அழகி சிறையில் தற்கொலைக்கு முயன்றதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

என்டிசார் அல்-ஹம்மடி திங்களன்று தனது சிறைச்சாலையில் தூக்கிலிட முயன்ற பின்னர் சனாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவரது சட்டத்தரணி கலீத் அல் கமல் புதன்கிழமை தெரிவித்தார்.

சட்டத்தரணியின் கூற்றுப்படி, மொடல் அழகியை விபச்சாரி என்ற வகைப்பாட்டிற்குள் ஹவுத்தி போராளிகள் உள்ளடக்கியதை தொடர்ந்து, மொடல் அழகி அல்-ஹம்மதியின் மன மற்றும் உடல் நிலை “மிகவும் கடினம்” ஆனது.

“ஹவுத்திகள் அவமானப்பட்டதாக அவர் உணர்ந்தார்,”  என அல்-கமல் கூறினார்.

20 வயதான மொடலும் நடிகையுமான அல்-ஹம்மதி, பெப்ரவரியில் ஈரான் ஆதரவு குழுவினரால் கடத்தப்பட்டு பின்னர் விசாரிக்கப்பட்டு, உடல் ரீதியாகவும், வாய்மொழியாகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, இனவெறி மற்றும் பாலியல் அவமதிப்புகளுக்கு ஆளானார் என்று ஆர்வலர்கள் அப்போது தெரிவித்தனர்.

ஹவுத்திகள் அல்-ஹம்மதி மீது விபச்சாரம், போதைப்பொருள் கையாளுதல் மற்றும் இஸ்லாமிய விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டினர். மேலும் அவரது வழக்கறிஞரை அவரது வழக்கு ஆவணங்களைப் பார்ப்பதைத் தடுத்தனர். ஆனால், அல் ஹம்மடி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.

உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளிள் கோரிக்கை விடுத்த போதிலும், போராளிகள் இந்த மொடல் அழகியை விடுவிக்க மறுத்து விட்டனர். அவரை வெளியார் அணுகவும் தடுக்கப்பட்டது.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்திற்கு எதிராக 2015 இல் ஈரான் ஆதரவு ஹவுத்திகள்  போரை நடத்தியதில் இருந்து யேமன் பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்முறைக்கு உள்ளாகி வருகின்றனர்.

சமீபத்திய மாதங்களில், ஹவுத்திகள் பெண்களுக்கு எதிரான மீறல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் “ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற” கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண்கள் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றில் வேலை செய்வதைத் தடைசெய்தல், பிறப்புக் கட்டுப்பாட்டை செய்வதற்கு முன் கணவரின் அனுமதி தேவை, பல்கலைக்கழக வகுப்பறைகளில் பெண் மற்றும் ஆண் மாணவர்களைப் பிரிக்க சிமென்ட் சுவர்களை அமைத்தல் போன்ற கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிப்பு!

Pagetamil

மனைவியை கொன்று இன்சூரன்ஸ் பணத்தில் செக்ஸ் பொம்மை வாங்கிய கணவன்!

Pagetamil

தனக்கு ஏற்பட்ட நிதி இழப்பீட்டுக்கு கோட்டா, மஹிந்தவிடம் நட்டஈடு கோரும் வர்த்தகர்!

Pagetamil

’39 வயது கணவர் என்னை ராணியை போல பார்த்துக் கொள்கிறார்’; 73 வயது மனைவி நெகிழ்ச்சி: வாரத்தில் 6 முறை உல்லாசமாம்!

Pagetamil

இறுக்கமான ஆடை அணிந்த ரிக்ரொக் வீடியோ வெளியிட்டு பிரபலமான பெண் சுட்டுக்கொலை!

Pagetamil

Leave a Comment