31.3 C
Jaffna
March 28, 2024
மருத்துவம்

அடிக்கடி விக்கல் வந்துகொண்டே இருந்தால் அது என்னென்ன நோய்க்கான அறிகுறிகள்!

நம் உடல் பல தீராத மர்மங்களைக் கொண்டுள்ளன. அவற்றுக்கு தீர்வு இன்னும் கண்டிபிடிக்கப்படவில்லை. விக்கல் ஏற்படுவதற்கு உதரவிதானத்தின் தன்னிச்சையான சுருக்கங்களே காரணமாகிறது. விக்கலில் ஏற்படும் ஒளி எதனால் ஏற்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா…? விக்கல் வரும் போது நமது குரல் நாண்கள் சிறிது நேரத்திலேயே மூடப்பட்டு விடும். அதனால் தான் விக்கல் வரும் போது சத்தம் வருகிறது.
​நீண்ட நேர விக்கல்

பொதுவாக விக்கல்கள் அதிக நேரம் நீடிக்காது. விக்கல் 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் போது, அது கவலைக்குரியது. நாம் சோர்வடையும் நேரத்தில், உடலை புத்துணர்ச்சி பெற வைக்க சோடா குடிப்பது கூட நமக்கு விக்கல் ஏற்பட காரணமாகிறது. நாள்பட்ட விக்கல் பல நோய்களின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். உங்கள் விக்கல்கள் 48 மணி நேரம் முதல் 30 நாட்கள் வரை தொடர்ந்து நீடிக்கும் போது, அவை சிக்கலானது. அப்படி தொடர் விக்கல் ஏற்பட்டால் அதனை கவனத்தில் கொண்டு மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டும்.

​நரம்பியல் பிரச்சனைகள்

உதரவிதானத்தின் சுருக்கத்தால் தான் விக்கல்கள் ஏற்படுகின்றன என்பதை நாம் அறிவோம். உதரவிதானத்தில் உள்ள வேகஸ் அல்லது பிரெனிக் நரம்புகளில் ஏதேனும் எரிச்சலோ அல்லது சேதமோ ஏற்பட்டால் விக்கல் ஏற்படும். இந்த நரம்புகள் உதரவிதானத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் உங்கள் நரம்புகளில் விக்கல் மற்றும் எரிச்சலுக்கு வழி வகுக்கும். இதனால் உங்களுக்கு கழுத்து நரம்பில் ஏற்படும் பிரச்சனையால் கட்டிகள் ஏற்படும். அதுமட்டுமின்றி, தொண்டை வலி அல்லது குரல் வளை அழற்சி, ஆசிட் ரிப்ளக்ஸ், நிமோனியா போன்ற நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படும்.

நரம்பு மண்டலத்தை பாதிக்கும் எந்தவொரு தொற்று அல்லது பிரச்சனையும் நம் நாள்பட்ட விக்கல்களில் பிரதிபலிக்கக் கூடும். மூளை சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதால் கூட விக்கல் ஏற்படலாம். அதேபோல் மல்டிபிள் ஸ்களீரோசிஸ், மூளை காயம், என்செபலிடிஸ் மற்றும் மூளைக் காய்ச்சல், பக்கவாதம், மூளைக் கட்டிகள், மற்றும் முதுகெலும்பு காயங்களால் கூட தொடர் விக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது.

​இரைப்பை மற்றும் குடல் பிரச்சனை

நமது வயிறு, குடல், கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான பிரச்சனை கூட விக்கல் ஏற்படுவதற்கு காரணமாகும். அதிகப்படியான சோடா பானங்களை அருந்துவது, அதிகப்படியான உணவு உட் கொள்வது, வேகமாக சாப்பிடுவது மற்றும் மிட்டாய் அல்லது இனிப்பு அதிகமாக சாப்பிடுவது கூட விக்கல் ஏற்பட பொதுவான காரணமாகும். நம் வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனை குறிப்பாக இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளால் கூட விக்கல் ஏற்படும். அதேபோல் விக்கல்களை ஏற்படுத்தும் சில நோய்கள் உள்ளன. வயிற்றுப் புண், மஞ்சள் காமாலை, காலரா, குடல் அழற்சி, நாட்பட்ட நோய்களால் கூட விக்கல் வரும்.

​உட்கொள்ளும் சில மருந்துகள்

நாம் சில மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் கூட நமக்கு விக்கல் ஏற்படும். உடலில் ஏற்படும் சிக்கல்களை வெளிப்படுத்தும் வடிவமே விக்கல் ஆகும். நாம் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் கூட விக்கல் ஏற்படக் காரணமாகும். அப்படிப்பட்ட மருந்துகள் என்னவென்று பார்க்கலாம் வாங்க. மயக்க மருந்து, நீரிழிவு நோய், சிறுநீரக கோளாறுகள், ஸ்டெராய்டுகள், கீமோதெரபியில் பயன்படுத்தப்படும் மருந்துகள், இரத்தத்தில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவுகளில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு போன்றவற்றால் விக்கல் ஏற்படும்.

​அறுவை சிகிச்சைகள்

விக்கலை ஏற்படுத்தும் பகுதிகளில் செய்யக்கூடிய அறுவை சிகிச்சைகள், நரம்பு மண்டலம், மூளை, இரைப்பை குடல் பகுதிகள் அல்லது உதரவிதானம் சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சைகள் கூட விக்களைத் தூண்டும். அதுமட்டுமின்றி, இருதய பிரச்சனைகள், மாரடைப்பு மற்றும் வீக்கம் போன்ற விளைவுகளாகவும் விக்கல் ஏற்படலாம். இவை மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளாக செயல்படலாம். இதுமட்டுமின்றி, நாள்பட்ட விக்கல்களுக்கு புற்று நோய் கூட அடிப்படை காரணமாக இருக்கக் கூடும்.

​மனச்சோர்வு

பதட்டம் அல்லது மனச் சோர்வினால் ஏற்படும் மன உளைச்சல் கூட விக்கல் ஏற்பட காரணமாகலாம். உங்கள் நாள்பட்ட விக்கல்களுக்கு எது காரணமாக இருக்கக்கூடும் என்பதை மருத்துவரை அணுகி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாள்பட்ட விக்கல்கள் அடிப்படை உடல் நலப் பிரச்சனைகளை அதிகரிக்கக் கூடும் எனவே விக்கலை சாதாரணமாக எடுத்துக் கொண்டு புறக்கணிக்கக் கூடாது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

Leave a Comment