நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சௌபாக்கியா வாரம் தேசிய நிகழ்ச்சித்திட்டம்; கிளிநொச்சியிலும் ஆரம்பம்!

Date:

நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சௌபாக்கியா வாரம் தேசிய நிகழ்ச்சித்திட்டம் இன்று கிளிநொச்சியிலும் ஆரம்பிக்கப்பட்டது.

இம்மாதம் 1ம் திகதி தொடக்கம் 7ம் திகதி வரை சௌபாக்கியா வாரம் தேசிய நிகழ்ச்சித்திட்டமாக கடைப்பிடிக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் 2 லட்சம் நலிவுற்ற குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மே்படுத்தும் தேசிய வேலைத்திட்டமாக குறித்த நிகழ்ச்சித்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கண்டாகளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் பிரமந்தனாறு பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன். மாவட்ட ஒருங்கிணைப்புகுழுவின் இணைப்பாளர் வை.தவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 240 பேர் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் 45 ஆயிரம் பெறுமதியான வாழ்வாதார உதவி தொகை வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் 2021, 2022ம் ஆண்டுக்கான சிப்தொற புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதாக கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தெரிவித்தார்.

இதேவேளை சமுர்த்தி பயனாளிகளிற்கான இலவச மின்சாரம் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பெண் பலி: சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை...

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்