யாழ் மாவட்ட செயலகத்திற்கு வந்த பாகிஸ்தான் தூதர்!

Date:

இலங்கைக்கான பாகிஸ்தான் நாட்டுத் தூதுவர் மொகமட் சாட் கட்டாக் இன்று புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு வந்திருந்தார்.

யாழ் மாவட்ட செயலாளர் க.மகேசன் தலைமையிலான குழுவினர் அவரை வரவேற்று, கலந்துரையாடலில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும், சந்திப்பில் கலந்து கொண்டார்.

யாழ் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி, சமகால நிலைமைகள் தொடர்பில் பாகிஸ்தான் தூதருக்கு காணொளி முறையில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்கள தலைவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளிதரன், திணைக்கள தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்