24.4 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இந்தியா

அம்பேத்கருக்கு ரூ.50 கோடியில் நினைவு மண்டபம் – பா.ஜனதா அரசு முடிவு!

சட்டமேதை அம்பேத்கருக்கு உத்தரபிரதேசத்தில் ரூ.50 கோடி மதிப்பில் நினைவு மண்டபம் கட்ட அந்த மாநில பா.ஜனதா அரசு முடிவு செய்துள்ளது.

லக்னோவில் உள்ள ஐஷ்பாக்கில் அம்பேத்கர் நினைவு மண்டபம் மற்றும் கலாச்சார மையம் கட்டப்படுகிறது. இதற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை அடிக்கல் நாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் 45 மீட்டர் உயரமுள்ள அவரது சிலை வைக்கப்படுகிறது. இந்த மையத்தின் ஒரு பகுதி டிசம்பர் முதல் வாரத்துக்குள் கட்டி முடிக்கப்படலாம்.

அம்பேத்கர் நினைவு மண்டபத்தை அவரது நினைவு தினமான டிசம்பர் 6-ந் தேதி திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஆளும் பா.ஜனதா அரசு தீவிரமாக உள்ளது.

இதன் ஒரு பகுதியாக தலித் சமூகத்தினரை கவர்ந்திழுக்கும் வகையில் அம்பேத்கருக்கு பிரமாண்ட நினைவு மண்டபம் கட்ட திட்டமிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

மது போதையில் மதகுரு

east tamil

​​காதலியை கொன்று உடலை பதப்படுத்தி வைத்த மருத்துவர்: 3 மாதங்களுக்கு பின்னர் சிக்கியது எப்படி?

Pagetamil

கமலின் மநீம-வில் இருந்து விலகியது ஏன்? – நடிகை வினோதினி விளக்கம்

Pagetamil

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் கோரி வழக்கு: நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Pagetamil

Leave a Comment