உதவியாளருக்கு கொடுத்த முத்தத்தால் வினை: அமைச்சு பதவியும் போனது; மனைவியும் பிரிந்தார்!

Date:

கோவிட் விதிகளை மீறியதற்காக பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மட் ஹான்காக். இதேவேளை அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்துள்ளார்.

சுகாதாரத் துறையின் லண்டன் தலைமையகத்தில் தனது உதவியாளர் ஜினா கொலடங்கேலோவை முத்தமிடும் சிசிரிவி காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, இந்த புதிய நிலைமைகள் உருவாகின.

சி.சி.டி.வி காட்சிகளைப் பெற்றதாக த சன் பத்திரிகைக்குத் தெரிவித்தபின், ஹான்காக் வியாழக்கிழமை இரவு தனத வீட்டிற்கு ஓடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தை பற்றி மனைவி மார்த்தாவுக்கு அவர் அறிவித்தார். எனினும், இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அவர், சுகாதார அமைச்சரை விட்டு பிரிந்து விட்டார்.

ஹான்காக் தம்பதியின் திருமண வாழ்க்கை 15 ஆண்டுகளில் முடிவடைகிறது.

ஹான்காக் (42) இன்று தனது சஃபோல்க் தொகுதி வீட்டில் இருந்தார், 44 வயதான மார்த்தா லண்டனில் உள்ள குடும்ப வீட்டில் இருந்தார்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறி தனது அமைச்சு அலுவலகத்தில் ஒரு உதவியாளரை முத்தமிட்ட வீடியோ காட்சிகள் வெளிவந்த மறுநாளே அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஹான்காக் இப்போது கொலடாங்கெலோவுடன் ஒரு உறவில் இருப்பதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது,

மார்த்தா ஹான்காக்

1990 களின் பிற்பகுதியில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருவரும் சந்தித்ததாக கூறப்படுகிறது.

கொலடாங்கெலோவின் கணவர் ஒலிவர் ட்ரெஸ், மனைவியின் இரகசிய உறவு குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

“வழிகாட்டுதலை மீறியதற்காக எனது மன்னிப்பை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன், மேலும் எனது குடும்பத்தினரிடமும் அன்பானவர்களிடமும் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். இந்த நேரத்தில் நான் எனது குழந்தைகளுடன் இருக்க வேண்டும்.” என மட் ஹான்காக் கூறினார்:

ஜினா கொலடங்கேலோ கணவனுடன்

ஹான்காக் சனிக்கிழமை மாலை தனது ராஜினாமாவை அறிவித்தார் . முன்னாள்  உள்துறை அமைச்சர் சஜித் ஜாவிட்,  புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று டவுனிங் தெரு அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்