29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
உலகம்

தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்: பிலிப்பைன்ஸ் அதிபரின் கருத்தால் சர்ச்சை!

பிலிப்பைன்சில் கோவிட் தடுப்பூசி போட மறுப்பவர்கள் இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்லுங்கள் எனக்கூறி அந்நாட்டு அதிபர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ளதாவது, நாடு முழுவது கோவிட் தொற்று மோசமாக பரவி வருகிறது. கோவிட் பரவலைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். ஆனால் பலரும் தடுப்பூசி போட மறுக்கின்றனர். தடுப்பூசி போடாதவர்களை கைது செய்ய நேரிடும். கைது செய்து, தடுப்பூசி போடுவோம்.

ஏற்கெனவே பெருந்தொற்று பேரிடரால் அவதியுற்று இருக்கும் எங்களுக்கு, தடுப்பூசி போடமாட்டேன் எனக்கூறுபவர்கள் மேலும் மேலும் சுமை கொடுக்கின்றீர்கள் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். நான் இவ்வளவு எடுத்துரைத்த பிறகும், உங்களுக்கு தடுப்பூசி வேண்டாமென்றால், இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள்.

இந்தியாவுக்கு செல்லுங்கள் அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் நாட்டுக்கு செல்ல வேண்டுமென்றாலும் செல்லுங்கள் அமெரிக்காவுக்கு கூட செல்லுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவை, தடுப்பூசியிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் செல்லக்கூடிய நாடாக அவர் முன்மொழிந்திருப்பதும், தடுப்பூசியை போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக அதிகாரத்தன்மையை நிலைநாட்ட நினைப்பதும் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment