நடிகை நமீதா தனது முதல் டோஸ் கொரானா தடுப்பூசியை இன்று போட்டுக்கொண்டார்.
தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நமீதா. இளைஞர்களை பார்த்து ‘ ஹாய் மாச்சான்’ என கூறி குஷிப்படுத்துவார். பல முன்னணி ஹீரோக்களோடு நடித்து பிரபலமாகியுள்ளார். இவரின் படங்களுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு இருக்கும். சினிமா வாய்ப்பு குறைந்தால் டிவி ஷோக்களில் நடுவராக கலந்துகொண்டு அசத்தி வந்தார். இதையடுத்து தமிழில் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று அனைவரின் அன்பையும் பெற்றார். நீண்ட இளைவெளிக்கு பிறகு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையே கொரானா இரண்டாவது அலை பெருத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கிறது. அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஒரே ஆயுதமாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. அதனால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டு வருகிறார். அதேபோன்று சினிமா பிரபலங்களுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை நமீதா, தனது முதல் டோஸ் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ராய் லக்ஷ்மி தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட போது மிகவும் பயந்து போய் தனது கண்களை மூடிக்கொண்டுள்ளார் ராய் லக்ஷ்மி. ஊசி குத்தி முடித்தபோது அழும் நிலைமைக்குச் சென்றுள்ளார். இன்ஸ்ட்டாகிராமில் அந்த விடியோவைப் பகிர்ந்துள்ள ராய் லக்ஷ்மி,





