29.8 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

செங்கலடி பொதுச்சந்தையில் சுகாதார விதிகளை மீறும் வர்த்தகர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மட்டக்களப்பு – செங்கலடி பொதுச்சுகாதாரப்;பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் செங்கலடி பொதுச்சந்தையில் தற்போது அதிகமாக மக்கள் ஒன்று கூடி பொருட்கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

இதே வேளை சுகாதார நடைமுறைகளை மீறும் வகையிலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையிலும் செங்கலடி பொதுச்சந்தையில் அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்;கள் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிககையும் இடம்பெற்று வருகின்றது.
இதனால் பொதுச்சந்தையில் அதிகமாக பொது மக்கள் ஒன்று கூடுவதையும் சன நெரிசலையும் அதிகமாக அவதானிக்க முடிகின்றது.

இந் நிலையில் இன்று செங்கலடி பொதுச்சந்தைக்கு திடீர் சேதனையில் ஈடுபட்ட செங்கலடி பொதுசுகாதார பரிசேதகர் எஸ்.தவேந்திரராஜா உட்பட்ட ஏறாவூர் பொலிசார் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவேறுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தனர்.
இவ்வாறு சன நெரிசலான இடங்களில்; அத்தியாவசியமற்ற வர்த்த நிலையங்கள் திறப்பதை முற்றாகத் தவிர்க்க வேண்டும் எனவும் வர்த்தநடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் எனவும் சுகாதாரத்துறையினர் வர்த்தகர்களுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். மக்களும் இவ்விடயம் தொடர்பில் விழிப்புடன் செயற்பட்டால் மாத்திரமே நோய்த்தாக்கத்தை குறைத்துக்கொள்ள முடியும் எனவும் சுகாதாரத்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

Leave a Comment