கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதால், அந்த பகுதியை தனிமைப்படுத்தும் அனுமதி கோரப்பட்டுள்ளது.
ஜே/350 கிராம சேவகர் பிரிவில், பருத்தித்துறை- யாழ்ப்பாணம் வீதியில் மூத்த விநாயகர் கோயிலடி ஊடாக குஞ்சர்கடைச் சந்தி , அந்திரான் சந்தை, மணியகாரன் தோட்டம் பாடசாலை முன் வீதி, தூதாதவளைச் சந்தி ஊடாக மூத்த விநாயகர் ஆலயம் வரைக்குமான பிரதேசத்தை முடக்க கொவிட் செயலணியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 20 வரையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட்- 19 செயலணியின் அனுமதி கிடைத்ததும், முறைப்படியான அறிவிப்பு வெளியாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1