பிரபல பாடலாசிரியர் கொரோனாவிற்கு பலி: சோகத்தில் திரையுலகினர்!

Date:

மலையாள திரையுலகின் மூத்த பாடலாசிரியரான பூவாசல் காதர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 72.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிபடியாக குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து ஊரடங்கில் ஒருசில தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் பலரின் உயிர்களை காவு வாங்கியுள்ளது இந்த கொரோனா இரண்டாம் அலை. இந்நிலையில் மலையாள திரையுலகின் மூத்த பாடலாசிரியரான
பூவாசல் காதர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள திரையுலகின் மூத்த பாடலாசிரியர் பூவாசல் காதர். கட்டுவிதச்சவன் திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர், பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் தென்னிந்திய மற்றும் மலையாள திரையுலகின் பல முன்னணி பழம்பெரும் இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை எழுதியுள்ளார் பூவாசல் காதர்.

தமிழ் திரையுலகில் பழம்பெரும் இசையமைப்பாளரான கே.வி.மகாதேவன் முதல் இசைஞானி இளையராஜா, சங்கர் கணேஷ், கங்கை அமரன் உள்ளிட்ட பல இசை அமைப்பாளர்களின் பாடல்களுக்கு வரிகள் தந்துள்ளார் பூவாசல் காதர். மேலும் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம், எஸ்.ஜானகி,
கே.எஸ்.சித்ரா, பி.சுசீலா. பி.மாதுரி, உண்ணிமேனன் உள்ளிட்ட பல பிரபல பாடகர்கள் அனைவரும் பூவாசல் காதர் வரிகளில் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கபட்ட பூவாசல் காதர், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கபட்டனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பூவாசல் காதர் மறைவு குறித்து பிரபல பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக இரங்கல் பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில், ‘மலையாளத் திரையுலகில் அழகான பாடல்களை அர்ப்பணித்த பூவாசல் காதர் இன்று மறைந்தார். இந்த கோவிட் காலத்தில் எத்தனை விலைமதிப்பற்ற உயிர்களை நாம் இழந்துள்ளோம். எனது முதல் பாடலான “செல்லம் செல்லம்” என்ற மாநில விருது பெற்ற பாடல் மற்றும் “பூமநேம்” என்ற சூப்பர்ஹிட் பாடல் உள்பட பல பாடல்களை எழுதியுள்ளார். மிகவும் மென்மையான மரியாதைக்குரிய நபராக இருந்த பூவாசம் காதர் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய விரும்புகிறேன். அவர்களது குடும்பத்தினரின் பெரும் துயரத்தில் பங்கு கொள்கிறேன்’ என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் கே.எஸ்.சித்ரா.

spot_imgspot_img

More like this
Related

நிந்தவூரில் சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு கடும் நடவடிக்கை: இரகசிய கண்காணிப்பு கமராக்கள் பொருத்தம்

நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள...

வன்முறை முறைப்பாடுகளை கையாள வடக்கு பொலிஸாருக்கு தமிழில் விசேட பயிற்சி

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அடிப்படை உரிமைகள், பால்நிலை சமத்துவம் தொடர்பிலான...

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்