Pagetamil
இலங்கை

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸாக ஃபைசர்!

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸாக  ஃபைசர் தடுப்பூசி பயன்படுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் இலங்கைக்கு 78,000 டோஸ் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி கிடைக்க உள்ளது.

ஜூலை மூன்றாம் வாரத்திற்குள் தடுப்பூசிகளை எதிர்பார்க்கிறோம் என்று  அமைச்சர் சன்னா ஜெயசுமனா கூறினார். .

அதன்படி, ஒவ்வொரு வாரமும் 26,000 ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு வரும்.

இன்று முன்னதாக கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை முதல் டோஸாக பெற்றவகளுக்கு ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசி இரண்டாவது டோஸாக வழங்கலாமென நிபுணர்குழு பரிந்துரைத்துள்ளது. இது இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என்றார்.

ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளை 33.7 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வாங்க சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளதாக கூறினார்.

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட், சினோஃபார்ம் மற்றும் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி அளவுகளை ஜனவரி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு 05 மில்லியன் டோஸ் ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசியை இறக்குமதி செய்வதாக அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது.

இதற்கிடையில், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டபுல்லே, இலங்கை 264,000 அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை எதிர்பார்க்கிறது, இது 60 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு 2 வது டோஸாக பயன்படுத்தப்படும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுமியை போலி அடையாளத்தில் வெளிநாடு அனுப்பிய முகவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

Leave a Comment