வியாழேந்திரனின் வீட்டுக்கு சென்று நீதிவான் விசாரணை: மெய்ப்பாதுகாவலருக்கு 14 நாள் விளக்கமறியல்!

Date:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரை 14 நாள் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு, பிள்ளையாரடியிலுள்ள இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் வீட்டின் முன் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார். வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரே சூட்டை நடத்தியிருந்தார்.

இன்று, சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று முன்னெடுத்துள்ளார்.

நேற்றைய சூட்டு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி குறித்த பகுதிக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளார். இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

நிந்தவூரில் சட்டவிரோத குப்பை கொட்டலுக்கு கடும் நடவடிக்கை: இரகசிய கண்காணிப்பு கமராக்கள் பொருத்தம்

நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள...

வன்முறை முறைப்பாடுகளை கையாள வடக்கு பொலிஸாருக்கு தமிழில் விசேட பயிற்சி

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், அடிப்படை உரிமைகள், பால்நிலை சமத்துவம் தொடர்பிலான...

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்