பருத்தித்துறையில் பொதுமக்கள் கூடுமிடங்களில் எழுமாற்றான சோதனை!

Date:

கடந்த சில நாட்களாக பருத்தித்துறை கொட்டடி மீன் சந்தையில் அதிகளவான மக்கள் சமூக இடைவெளியை பொருட்படுத்தாது மீன் கொள்வதற்காக ஒன்று கூடுவதும் முகக்கவசம் இன்றி நடமாடுவதும் அவதானிக்கப்பட்டு வந்தது.

இதனால் தொற்று பரவும் அபாயமும் காணபட்ட்துஎனவே பொதுமக்கள் கூடும் இடங்களில் தொற்று ஏற்படுகின்றதா என்பதை பரிசோதிப்பதற்காக கொட்டடி மீன் சந்தையை இலக்கு வைத்து எழுமாற்று பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நேற்று காலை 8 மணி முதல் 11 மணி வரை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 162 பேர் பங்கு கொண்டனர். இந்த பரிசோதனைகளில் மக்களை ஒழுங்குபடுத்தும் வேலைகளில் கற்கோவளம் இராணுவத்தினரும், பருத்துறை பொலிஸாரும் ஈடுபட்டனர்.

தொடர்ந்தும் இவ்வாறு பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களை இலக்கு வைத்து எழுமாறான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை திட்டமிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

‘அன்று புலிகளுடன் இணைந்தனர் ஈரோஸ்; இன்று ஈரோசுடன் இணைந்தனர் புலிகள்’: பிரபாகரன் அறிவிப்பு!

ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக...

மஹிந்த மனைவிக்கு சிங்கப்பூரில் பரிசோதனையாம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்ஷ, நேற்று காலை...

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ.ஜி.எம். ரிசாத் பொறுப்பேற்பு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஏ.ஜி.எம். ரிசாத்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்