மட்டக்களப்பு- திருகோணமலை வீதியை மறித்து மக்கள் போராட்டம்: தொடரும் பதற்றம் (VIDEO)

Date:

அமைச்சர் ச.வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச் சூட்டினால் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள், கிராமத்தவர்கள் மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், சுமார் 15 நிமிடங்கள் அளவில் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் விசேட அதிரடிப்படையினரும், பொலிசாரும் தலையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றினர்.

மட்டக்களப்பு, பிள்ளையாரடியிலுள்ள இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இன்று மாலை 5.10 மணியளவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.

மகாலிங்கம் பாலசுந்தரம் (34) என்ற டிப்பர் சாரதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரும், அவருடன் முச்சக்கர வண்டியில் வந்தவரும் மதுபோதையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தருடன் முரண்பட்டு, மோதலில் ஈடுபட்ட பின்னர் துப்பாக்கிச்சூடு நடந்தது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்