கிளிநொச்சியில் போமலின் நச்சுப் பதார்த்தம் கலக்கப்பட்ட மீன்கள் விற்பனை: பொது மக்கள் குற்றச்சாட்டு

Date:

கிளிநொச்சியில் சில சந்தர்ப்பங்களில் பொது மக்களால் கொள்வனவு செய்யப்படுகின்ற மீன்களில் போமலின் ( Formalin) நச்சுப்பதார்த்தம் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக பெரிய வகை மீன்களில் இவ் வகை பதார்த்தம் கலக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இறந்தவர்களின் உடல்கள் பழுதடையாது சில நாட்களுக்கு வைத்திருப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற இப் பதார்த்தத்தை மீன்கள் பழுதடையாது வைத்திருப்பதற்கும் மொத்த வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர் என்றும் அத்தோடு மீன்கள் பளபளப்பாக இருப்பதற்காக இவற்றுடன் சீனியும் கலக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

எனவே இது தொடர்பில் உரிய தரப்பினர் அதிக அக்கறை எடுத்து பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொது மக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக மோசடி: முல்லைத்தீவு செய்தியாளர் கைது!

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், முல்லைத்தீவு...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான...

கபிலசந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை

ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்