24.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

கொரோனா தொற்றினால் செல்லப்பிராணிகளிலிருந்து விலகியிருங்கள்!

சுகயீனம் போன்ற நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி டிலான் ஏ.சதரசிங்க தெரிவித்துள்ளார்.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான சிங்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையில் விலங்குகளுக்கு இடையே கொவிட் தொற்று பரவுகின்றமை தொடர்பிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ​அவர் இதன்போது தெரிவித்தார்.

மேலும், தொற்றுக்கு உள்ளான சிங்கம் மற்றும் மூன்று குட்டிகள் தொடர்பில் மேலதிக பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

வித்தியா கொலை வழக்கு – குற்றவாளிகளின் மேன்முறையீட்டை விசாரிக்க உள்ள உயர் நீதிமன்றம்

east tamil

Leave a Comment