அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் காரணமாக இன்னும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.
இந்தச் சூழலில் விக்டோரியா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிப்ஸ்லேண்ட் நகரவாசிகளை அப்பகுதி சிலந்திகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. அந்நகரின் சாலைப் பகுதி ஓரங்களில் சிலந்திகள் பல மீட்டர்களுக்கு ராட்சச வலைகளைப் பின்னியுள்ளதே காரணம்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “வெள்ளத்தில் சிலந்திகள் சிக்கிவிடாமல் இருக்க சாலை மீது தங்களது வலைகளைப் பின்னியுள்ளன. இந்த வலைகள் ஒரு ராட்சச வெண்மை நிறப் புல்வெளி போன்று படர்ந்து காணப்படுகிறது. இத்தகைய சிலந்திகள் மனிதர்களுக்கு ஆபத்து எதையும் விளைவிக்காது. எனினும் ஒவ்வாமை ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியாகியுள்ளது.
#WATCH | Massive spider web blankets Australia’s bushland after heavy rains in the region. Visuals from Gippsland, Victoria.
(Source: Reuters) pic.twitter.com/3jGwARkHHk
— ANI (@ANI) June 17, 2021