அனுமதியில்லாத திருமண மதுவிருந்து… ஆடல், பாடல்; அதில் பேஸ்புக் live வேறு!

Date:

கல்பிட்டி பொலிஸ் பிரிவில் கண்டக்குளி கிராமத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, சட்டவிரோதமாக திருமண விருந்து நடத்திய ஒரு குழுவினர் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

திருமண விருந்து வழங்கிய வீட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தனிமைப்படுத்தல் விதிகளை மீறி விருந்தில் கலந்து கொண்டவர்களில் அடையாளம் காணப்பட்ட 5 பேரை தனிமைப்படுத்தவும், அவர்களை பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தவும் சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திருமண நிகழ்வை குறைந்தளவானவர்களுடன் நடத்த சுகாதார அதிகாரிகள் அனுமதித்திருந்தனர். எனினும், இரண்டாம் நாள் இரவு, 100 பேர் வரையில் கூடி விருந்து நிகழ்வு நடந்தது.

இதில் இளைஞர் குழுவொன்று மதுபானம் அருந்தி ஆடல், பாடல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. இதை பேஸ்புக்கில் நேரலையாகவும் ஒளிபரப்பினர்.

இது வைரலாக பரவியதையடுத்தே நடவடிக்கையெடுக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்