இலங்கை மற்றும் மாலத்தீவிற்கான தூதராக ஜூலி சுங்கை நியமிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்துள்ளார்.
உலக அரங்கில் அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய 4 தூதர்களை, ஜனாதிபதி பிடன் பரிந்துரைத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதராக ஜூலி ஜியுன் சுங் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
மூத்த வெளியுறவு சேவையின் தொழில் உறுப்பினரான ஜூலி சுங், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் மேற்கு அரைக்கோள விவகார பணியகத்தின் செயல் உதவி செயலாளராக உள்ளார்.
அவர் முன்பு திணைக்களத்தில் ஜப்பானிய விவகார அலுவலகத்தின் இயக்குநராக இருந்தார்.
கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தலைவராகவும், தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
முன்னதாக, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இடைநிலை ஒருங்கிணைப்பாளருக்கு சுங் தலைமை பணியாளராக இருந்தார்.
கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும், சீனாவின் குவாங்சோவில் உள்ள அமெரிக்க தூதரகத்திலு பணியாற்றியுள்ளார்.
கலிபோர்னியா-சான் டியாகோ பல்கலைக்கழகம் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது விவகார பாடசாலையில் பட்டம் பெற்றவர்.
திணைக்களத்தின் சிறப்பு மரியாதை விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். சுங் கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மற்றும் கெமர் மொழி பேசும் திறன் கொண்டவர்.