கள்ளக்காதலால் விபரீதம்: அழகு நிலைய பெண்ணின் முடி கத்தரிப்பு! (PHOTOS)

Date:

பிரபல சிங்கள மேடை மற்றும் திரைப்பட நடிகையின் மகளின் அழகு நிலையத்திற்குள் நுழைந்து, மகளை தாக்கி, அவரது தலைமுடியை கத்தரித்த குற்றச்சாட்டில் 3 பெண்களை பாணந்துறை வடக்கு பொலிசார் நேற்று (14) கைது செய்தனர்.

அவர்களை தலா 100,000 ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், அவரது 17 வயது மகள் மற்றும் மருமகள் என பொலிசார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த 53 வயதான நடிகை பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அழகு நிலைய பெண், தாக்குதல் நடத்திய பெண்களில் ஒருவரின் கணவருடன் உறவு வைத்திருப்பதால் இந்த விபரீதம் நடந்தது.

மொரட்டுவ, எகொட உயன பகுதியில் வசிக்கும் குடும்பத்தினரே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் அழகு நிலையத்திற்குள் நுழைந்து, அழகு நிலைய பெண்ணை தாக்கி, அவரது நீண்ட தலைமுடியை கத்தரித்துள்ளனர்.

சம்பவம் நடந்தபோது, அழகு நிலைய பெண்ணின் சட்டபூர்வ கணவரும், 2 பிள்ளைகளும் வீட்டிலேயே இருந்தனர்.

நேற்று (14) பிற்பகல் வெட்டப்பட்ட முடி மற்றும் கிழிந்த உடை ஆகியவற்றுடன் பொலிஸ் நிலையம் சென்று அந்த பெண் முறையிட்டார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்க விரும்புவதாக புகார் தெரிவிக்கப்பட்டதால், தடயவியல் மருத்துவ படிவமும் அவருக்கு வழங்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் 40, 31 மற்றும் 17 வயதுடையவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

பேத்தியை சீரழித்த தாத்தாவுக்கு 15 வருட சிறை

12 வயதுடைய சொந்த பேத்தியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 81 வயதுடைய...

மட்டக்களப்பு மாமாங்கத்தில் மோட்டார் சைக்கிள் சீற்றை உடைத்து தங்க ஆபரணங்களை திருடிய திருடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய அன்னதான மடத்திற்கு  சென்ற பெண் ஒருவர் நிறுத்தி...

“குடிபுகு சான்றிதழ் விவகாரத்தில் ஆளுநர் என்னை தவறாக வழிநடத்துகிறார்” – கிஷோர்

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்