மழையால் ஏற்பட்ட புதை குழிக்குள் புகுந்த கார்- வைரலாகும் வீடியோ!

Date:

கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வீதிகளில் எல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் குழிகள் ஏற்பட்டது. ரோடுகள் எல்லாம் பல்லாங்குழிகளாக மாறின. இந்நிலையில் சமீபத்தில் வைரலாகும் ஓரு வீடியோ ஒன்று காண்பவர்களாக ஷாக்காக்கியுள்ளது.

மும்பையின் மேற்கு காத்கோபர் பகுதியை உள்ள காமா லைன் என்ற இடத்தில் உள்ள ஒரு அப்பார்மெண்டில் தரைதளத்தில் கார்கள் எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தன. அப்பொழுது ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் தீடீரென புதை குழி ஏற்பட்டது. இதில் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த கார் ஒன்று தீடீரென யாரும் எதிர்பாராத நிலையில் அந்த புதை குழிக்குள் புகுந்துவிட்டது. இந்த காட்சியைத அப்பகுதியிலிருந்த ஒருவர் தன் செல்போன் கேமராவில் பதிவு செய்திருந்தார். இந்த கார் புதை குழிக்குள் செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் முதலில் பார்க்கும் போது சின்ன குழியாக தெரிகிறது. ஆனால் ஒரு கார் முழுவதும் உள்ளே சென்றுவிடும் அளவிற்கு ஆழமாக இந்த குழி இருந்துள்ளது. இந்த வீடியோ வைரலான பின்பு போலீசரும், போக்குவரத்து போலீசாரும் இணைந்து அப்பகுதிக்கு வந்து குழிக்கும் சென்ற காரை கிரேன் மூலம் மீட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்