28.9 C
Jaffna
April 14, 2025
Pagetamil
இந்தியா உலகம்

இந்தியாவில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படவில்லை: அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கண்டனம்!

இந்தியாவில் கொரோனாவுக்கு 42 லட்சம் பேர் பலியாகிவிட்டனர் என செய்தி வெளியிட்ட அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் இந்தியாவில் கொரோனாவுக்கு மூன்று லட்சம் பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது. உண்மையில் 42 லட்சம் பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

பலி எண்ணிக்கையை இந்திய அரசு மூடி மறைக்கிறது என செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்தும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்களின் படி கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதிவு செய்து வருகின்றன. மாவட்ட வாரியாக பலி எண்ணிக்கை தினமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் கொரோனாவுக்கு 42 லட்சம் பேர் இறந்துவிட்டதாக எந்த ஆதாரமும் இன்றி கற்பனையின் அடிப்படையில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

மனிதக் கேடயமாக பயன்படுத்தப்பட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர்

Pagetamil

டெல்லி லட்சுமிபாய் கல்லூரி சுவர்களில் பசு சாணத்தால் பூச்சு: முதல்வர் சொன்ன விளக்கமும் சர்ச்சையானது!

Pagetamil

ஈரானுடான இராஜதந்திர முயற்சி தோல்வியடைந்தால் இராணுவம் பயன்படுத்தப்படும்!

Pagetamil

”தற்போது எந்த வம்புக்கும் போவதில்லை; பேரன், பேத்திகளுடன் இருக்கிறேன்” – வரிச்சியூர் செல்வம் பேட்டி

Pagetamil

ஈரான்-அமெரிக்கா அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கும் அப்பாஸ் அரக்சி யார்?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!