Pagetamil
சினிமா

அடுத்தடுத்து நாவல்களை படமாக்கி வரும் வெற்றிமாறன்.. அடுத்த நாவல் யாருடையது தெரியுமா !

நாவல்கள் மற்றும் சிறுகதையை மையமாக வைத்து தனது படங்களை இயக்குனர் வெற்றிமாறன் எடுத்து வெற்றிப்பெற்று வருகிறார்.

தமிழ் திரையுலகில் சில படங்களே இயக்கினாலும் வெற்றி இயக்குனராக சாதனை படைத்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். தனுஷின் ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றிப் பெற்றுள்ளார். இவர் இயக்கிய ஐந்து படங்களும் சூப்பர் ஹிட்டடித்துள்ளன.

சமீபகாலமாக அவர் இயக்கி வரும் திரைப்படங்கள் நாவல்களை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவான ‘அசுரன்’ திரைப்படம் பூமணி எழுதிய வெட்கை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து தற்போது சூரி வைத்து இயக்கி வரும் விடுதலை திரைப்படமும் பல ஆண்டுகளுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதி வெளிவந்த ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் ‘விடுதலை’ படத்தை முடித்து சூர்யா வைத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன். இந்த படத்தின் கதை சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை தழுவி எடுக்கப்படுகிறது. இந்த படத்தின் கதைக்கருவாக ஜல்லிக்கட்டு மாடுகள் மற்றும் அதன் பின்னணி இருக்கும் என கூறப்படுகிறது. இதேபோன்று தனது அடுத்த படங்களையும் நாவலில் வரும் கதைகளை வைத்தே எடுக்க திட்டமிட்டுள்ளராம் வெற்றிமாறன்.

இதையும் படியுங்கள்

ஒரு பாடலுக்கு மீண்டும் நடனமாடும் தமன்னா!

Pagetamil

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!