மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனையில் பாழடைந்த கிணற்றிலிருந்து 4 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (10) அதிகாலை இந்த சம்பவம் நடந்தது.
மொஹமட் நளீம் ஹாசில் (4) என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு கணவன், மனைவி தமு பிள்ளைகளுடன் படுத்துறங்கிய போது, திடீரென பிள்ளையை காணாமல் தேடுதல் நடத்திய போது, வீட்டின் முன் பகுதியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்த சடலம் மீட்கப்பட்டது.
வாழைச்சேனை பொலிசார், தடயவியல் பொலிசார், சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இதேவேளை, தந்தையினால் உயிரிழந்த சிறுவன் அடிக்கடி தாக்கப்படுவதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1