29.5 C
Jaffna
March 28, 2024
கிழக்கு

உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை நேற்று (09) மாலை கைது செய்துள்ளதுடன், இரண்டு துப்பாக்கிகளையும் மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று மாலை, வவுணதீவு பொலிஸார் பாவக்கொடிச்சேனை மற்றும் நெல்லிக்காடு ஆகிய இரு பிரதேசங்களில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டனர்.

இதன்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டன. அவற்றை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

‘மணல் கொள்ளையில் ஈடுபடாதீர்கள்’: ஐ.தே.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை!

Pagetamil

Leave a Comment