26.3 C
Jaffna
March 23, 2023
கிழக்கு

உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை நேற்று (09) மாலை கைது செய்துள்ளதுடன், இரண்டு துப்பாக்கிகளையும் மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று மாலை, வவுணதீவு பொலிஸார் பாவக்கொடிச்சேனை மற்றும் நெல்லிக்காடு ஆகிய இரு பிரதேசங்களில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டனர்.

இதன்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டன. அவற்றை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விவசாய நிலத்தில் சூரிய மின்உற்பத்தி: விவசாயிகள் எதிர்ப்பு!

Pagetamil

எல்லாவல நீர்வீழ்ச்சியில் மாயமான மூவரின் சடலங்கள் மீட்பு: இதுவரை 17 பேரை பலியெடுத்த நீர்வீழ்ச்சி!

Pagetamil

மாளிகைக்காடு, காரைதீவு உணவகங்களில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை

Pagetamil

மட்டக்களப்பில் போரினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்புத் தரப்பு குடும்பங்களுக்கான ஒருங்கிணைந்த இடம்பெயர் சேவை

Pagetamil

உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரியின் காதலி சாரா தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!