மூட மறுக்கும் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகள்: இன்று நீதிமன்றத்தில் வழக்கு!

Date:

கிளிநொச்சியில் கொரோனா தொற்று பரவல் ஆபத்துள்ள ஆடைத்தொழிற்சாலைகளை மூட வேண்டுமென உத்தரவிட கோரி, கரைச்சி பிரதேசசபையினால் இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

கரைச்சி பிரதேசசபையின் கடந்த அமர்வில், கரைச்சி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதென தீர்மானிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் கொரோனா தொற்று பரவலிற்கு ஆடைத் தொழிற்சாலைகளே காரணமாக இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களின் பின்னணியில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை கொத்தணியினால் கிளிநொச்சி கிராமமொன்றே முடக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிரதேசசபையின் தீர்மானம் ஆடைத் தொிற்சாலைகளிடம் நேரடியாக அறிவிக்கப்பட்டது. எனினும், அந்த தீர்மானத்தை ஆடைத் தொழிற்சாலைகள் கணக்கில் எடுக்கவில்லை. ஆடைத் தொழிற்சாலையை மூட மறுத்து விட்டன.

இதையடுத்து, இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆடைத் தொழிற்சாலைகளிற்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள்

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது காவலில் உள்ளவருமான ஷிரான் பாசிக்,...

நாட்டை குழப்ப முனைந்தவர்களின் பேச்சுக்களின் நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை...

கிளிநொச்சியில் புலிகளின் முகாம்: கதை விட்டவர் ‘களி சாப்பிடுகிறார்’!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சி மூலம், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்