மூட மறுக்கும் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகள்: இன்று நீதிமன்றத்தில் வழக்கு!

Date:

கிளிநொச்சியில் கொரோனா தொற்று பரவல் ஆபத்துள்ள ஆடைத்தொழிற்சாலைகளை மூட வேண்டுமென உத்தரவிட கோரி, கரைச்சி பிரதேசசபையினால் இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

கரைச்சி பிரதேசசபையின் கடந்த அமர்வில், கரைச்சி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதென தீர்மானிக்கப்பட்டது.

கிளிநொச்சியில் கொரோனா தொற்று பரவலிற்கு ஆடைத் தொழிற்சாலைகளே காரணமாக இருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களின் பின்னணியில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை கொத்தணியினால் கிளிநொச்சி கிராமமொன்றே முடக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிரதேசசபையின் தீர்மானம் ஆடைத் தொிற்சாலைகளிடம் நேரடியாக அறிவிக்கப்பட்டது. எனினும், அந்த தீர்மானத்தை ஆடைத் தொழிற்சாலைகள் கணக்கில் எடுக்கவில்லை. ஆடைத் தொழிற்சாலையை மூட மறுத்து விட்டன.

இதையடுத்து, இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் ஆடைத் தொழிற்சாலைகளிற்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எட்டயபுரம் அருகே இலங்கைத் தமிழர்கள் – கிராம மக்கள் இடையே மோதல்

எட்​டயபுரம் அருகே குளத்​துள்​வாள்​பட்​டி​யில் கிராம மக்​களுக்​கும், இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமைச்...

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்!

ஈரானின் இராணுவம் சனிக்கிழமையன்று ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியதாக அறிவித்தது. இதைத்...

அதிக வெப்பத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி?

அதிகரித்த வெப்பத்தினால் ஏற்படும் கண் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பாக யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்