இஸ்ரேலை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தாய்பாலை செயற்கையாக தயாரித்து சாதனை படைத்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர் தனக்கு ஏற்பட்ட பிரச்சனை இனி யாருக்கு ஏற்பட கூடாது என்பதற்காக இந்த கண்டுபிடிப்பை துவங்கி தற்போது சாதனை படைத்துள்ளார்.
தாய்ப்பால் ஒரு குழந்தைக்கு மிக முக்கியமான உணவு. அது தான் குழந்தையின் உடலுக்கு மிகவும் நல்லது. அதில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. அந்த சத்துக்கள் தான் புதிதாக பிறந்த குழந்தையை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. குழந்தை பிறந்து ஒரு ஆண்டிற்கு தாய் பால் தான் அதற்கு முக்கியமான ஒரு உணவு. குழந்தைக்கு தாய் பால் மட்டும் தான் செரிமானமாகும். அவ்வளவு மெல்லிதான குடலுக்கு ஏற்ற உணவு தாய் பால் தான். இப்படியான தாய்பாலுக்கு இது வரை மாற்று இல்லை ஆனால் தற்போது தயாரிக்கப்படுகிறது.
பயோமில்க்
இஸ்ரேலில் உள்ள பயோமில்க் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனம் தாயின் மார்பக செல்களிலிருந்து தாய்பால் உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இந்த பால் லேபில் தயாரிக்கப்படுகிறது. இந்த பாலில் தாய்பாலில் உள்ள அத்தனை சத்துக்களும் நிறைந்திருப்பதாக அந்நிறுவனம் சொல்கிறது.
இருந்தாலும் இந்த இரண்டு பால்களிலும் உள்ள ஒரே வித்தியாசம் ஆண்டிபாடிகள் தான். இந்நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை அறிவியல் அதிகாரியான லீலா ஸிரிக்லேண்ட் கூறும்போது மற்ற லேப்களில் தயாராகும் குழந்தைகளுக்கான பாலை விட எங்களது பாலில் அதிகமான சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் தாய்பாலில் உள்ள சத்துக்களுக்கு நிகராக உள்ளது. என கூறியுள்ளார்.
8 ஆண்டு உழைப்பு
டாக்டர் லீலா தாய்பாலுக்கான மாற்று பாலை தயாரிக்க முன் வந்ததற்கு அவரது சொந்த காரணமும் ஒன்றாக இருக்கிறது. அவருக்கு பிறந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையாகும். அதனால் அந்த குழந்தைக்கு அவரால் தாய்பால் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர் கடந்த 2013ம் ஆண்டு தாய்பாலுக்கான மாற்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
3 ஆண்டுகளில் விற்பனைக்கு வரும்
அதன் பின் டாக்டர் லீலா தனது நண்பரும் உணவு ஆய்வாளருமான மிக்கேல் ஈகர் உடன் இணைந்து தாய்பாலுக்கான மாற்று பாலை கண்டுபிடிக்கும் ஸ்டார் அப் நிறுவனத்தை துவங்கினார். அந்நிறுவனத்தை துவங்கும் போது அவர் இது தாய்பாலை தவிர்ப்பதற்கான தயாரிப்பாக இருக்க கூடாது மாறாக தாய்பால் வழங்க முடியாதவர்களான மாற்று பாலாக இருக்க வேண்டும் என உறுதி கொண்டார். அதே போல இன்று அவர் 99 சதவீத தாய்பாலை கண்டுபிடித்துவிட்டார். அவரது பால் இன்னும் 3 ஆண்டுகளில் மார்கெட்டிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.