அமெரிக்கா, தென்கொரியா போன்ற நாடுகளின் திரைப்படங்களை வைத்திருப்பவர்களை கடுமையாக தண்டிக்கும் புதிய சட்டம் ஒன்றை வடகொரியா இயற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் “வடகொரிய ஜனாதிபதி கிம் சமீபத்திய அந்நாட்டின் அரசு ஊடகத்துக்குக் கட்டளை ஒன்றை விதித்துள்ளார். அதில் இளைஞர்கள் தனித்துச் செயல்படும் பழக்க வழக்கங்களை அழிக்கும் வகையிலான நடவடிக்கைகள் தேவை. மேலும், வெளிநாடுகளின் மொழி வழக்கம், வெளிநாட்டு ஆடை மற்றும் சிகை அலங்காரம் ஆபத்தான விஷம் என்று கிம் குறிப்பிட்டுள்ளார்” என்று செய்தி வெளியானது.
மேலும் அமெரிக்க, தென்கொரிய நாடுகளின் திரைப்படங்களை வைத்திருந்தால் சிறை தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் கிம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



