முகக்கவசம் அணியாமல் யூடியூப் நிகழ்ச்சி நடத்திய பத்திரிகையாளர் மீது பொலிஸ் முறைப்பாடு!

Date:

நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதாக, ஆளுந்தரப்பு ஆதரவு பத்திரிகையாளர் சமுதித்த சமரவிக்ரம மீது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நிகழ்வுகள் அமைப்பாளர் சந்திமல் ஜெயசிங்கவினால் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தனக்கும், தனது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கும் பிணை வழங்க நீதிமன்றம் எடுத்த முடிவை விமர்சித்து நீதித்துறையை அவமதித்ததற்காக ஒரு முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், நீதிமன்ற அமர்வுகள் மீண்டும் தொடங்கியதும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யூடியூப் நேர்காணலில் முகக்கவசம் இல்லாமலும், சமூக இடைவெளியை பேணாமலும் நிகழ்ச்சியை நடத்தியதன் மூலம்,  தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக சமுதித்த சமரவிக்ரம மீது மற்றொரு  முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் சிக்கிய திருடர்கள்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்களை களவாடிய சம்பவம்...

தமிழக சீரியலில் நடித்து வந்த இலங்கை நடிகை விபரீத முடிவு

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினி தவறான...

45 நாள் தற்காலிக போர் நிறுத்தத்துடன் கூடிய பாகிஸ்தானின் சமாதான வரைவு!

போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும் திங்களன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்