பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா ரேஷ்மா?

Date:

நடிகை ரேஷ்மா முரளிதரன் பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து விலக போகிறார் என பரவிய செய்தி உண்மை இல்லை என அவரே விளக்கம் கொடுத்து உள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘பூவே பூச்சூடவா’. 2018ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த தொடரில் சக்தி என்ற ரோலில் நடித்து வருகிறார் ரேஷ்மா முரளிதரன்.

இதில் அழகிய நடிப்பை வெளிப்படுத்தி வரும் ரேஷ்மாவுக்கு அதிகம் அளவு ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ரேஷ்மா பூவே பூச்சூடவா சீரியலில் இருந்து விலக போகிறார் என தகவல் பரவியது.

ஆனால் அது உண்மையில்லை முற்றிலும் வதந்தி தான் என இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்து இருக்கிறார் நடிகை ரேஷ்மா முரளிதரன்.

“ஒரு வதந்தி பரவி கொண்டு இருக்கிறது. எனக்கு பதிலாக சக்தியாக வேறொரு நடிகை நடிக்க போகிறார் என பரவி வரும் செய்தி முற்றிலும் பொய் செய்தி. வருத்தப்படாதீர்கள். நான் திரும்ப வருவேன். Pls dont spread rumours” என ரேஷ்மா தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

UPDATE: நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100 பேர் வரை காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) வெடித்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில்,...

நீர்கொழும்பு சிறையில் இன்று மீண்டும் வன்முறை: 19 பேர் பலி; 50 இற்கும் அதிகமானோர் காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று...

அலி கமேனியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய 3 மகன்கள்!

கொல்லப்பட்ட ஈரானியத் தலைவர் அலி கமேனியின் மூன்று மகன்கள் ஞாயிற்றுக்கிழமையன்று அவரது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்