லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இயக்குனர் லிங்குசாமி கடைசியாக ‘சண்டைக்கோழி 2’ படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. தற்போது தெலுங்கு பக்கம் சென்றுள்ளார். நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் புதிய தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார் லிங்குசாமி.
இந்த படத்தில் உப்பேனா நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சீனிவாச சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளது.
தற்போது இந்தப் படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. மாதவன் லிங்குசாமி இருவரும் ஏற்கனவே ரன் மற்றும் வேட்டை ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.