புதுக்குடியிருப்பில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆடைத் தொழிற்சாலையை மீள திறப்பதற்கு எதிராக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு வர்த்தகர் சங்கத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாடு தொடர்பான வழக்கு நாளை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என புதுக்குடியிருப்பு வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் குறுகிய காலத்திற்கு பணிக்கு செல்லாமல், தமது குடும்பத்தையும், பிரதேசத்தையும் காப்பாற்றும்படி கோரிக்கையும் விடுத்துள்ளனர்.




