தலவாக்கலை கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் 6 பேருக்கு கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கொட்டக்கலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 36 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் அறிக்கைகள் வெளியாகிய நிலையில் அதில் 3 பெண்கள், ஒரு ஆண் மற்றும் இரண்டு சிறுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனாடிதொற்றுக்குள்ளான அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கொட்டக்கலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேலும் தெரிவித்துள்ளது.




