நேபாளத்தில் பரவும் கருப்பு பூஞ்சை; முதல் நோயாளி உயிர்பலி!

Date:

நேபாளத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா நெருக்கடிக்கே இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில்
கருப்பு பூஞ்சை நோய் பரவல் மற்றொரு தலைவலியாக இருக்கிறது. தமிழகம் உள்பட பல்வேறு இந்திய மாநிலங்களில் கருப்பு பூஞ்சை பரவி வருகிறது. வெளிநாடுகளிலும் கருப்பு பூஞ்சை கைவரிசையை காட்டியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்துள்ள நிலையில், முதல்முறையாக ஒரு நபர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் இதுவரை குறைந்தது பத்து பேருக்காவது கருப்பு பூஞ்சை தொற்று இருப்பதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அந்த நபருக்கு 65 வயது. அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரின் சளி மாதிரி பரிசோதிக்கப்பட்டபோது கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் தெரிய்வந்துள்ளது.

இதற்கு முன் மிக அரிதான நோயான கருப்பு பூஞ்சை தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நோய் மூளையை தாக்கி உயிரிழக்கச் செய்கிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் விகிதம் 50%. இந்நோயின் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளும் அரிது என்பது கூடுதல் சுமை.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் காயமடைந்த மேலும் 2 சிறை உத்தியோகத்தர்கள் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை...

பெற்றோரை அடித்துக்கொன்ற மகன்

எம்பிலிப்பிட்டிய பகுதியில் போதைக்கு அடிமையான மகன், நேற்று முன்தினம் (13) இரவு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் வாக்குமூலம் பதிவு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஷங்ரி-லா ஹோட்டல் குண்டுதாரியான முகமது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்