இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியமாக இருந்தது; சோயிப் மாலிக்!

Date:

தற்போதைய காலகட்டத்தில் பலமிக்க அணியாக இந்திய அணி உருவெடுத்துள்ளது. இந்த அணியைப் பலரும் பாராட்டிப் பேசி வருகின்றனர். குறிப்பாகப் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள், எப்போதும் இல்லாத அதிசயமாக இந்திய அணியைப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அந்த அளவுக்கு இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணி,, கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டெஸ்ட் தரவரிசையில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

தொடர் வெற்றிநடை போட்டு வரும் இந்திய அணி தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதுகுறித்து பாராட்டிப் பேசிய பாகிஸ்தான் அணி வீரர் சோயிப் மாலிக், இந்திய அணி எதிர்த்து விளையாடி மேட்ச் வின்னராக இருக்க வேண்டும் என்பதே தனது எண்ணமாக இருந்தது எனக் கூறினார்.

தனியார் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்த அவர், “இந்திய அணிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடுவதே என்னுடைய எண்ணமாக இருந்தது. என்னுடைய பல இன்னிங்ஸ்கள் இந்திய அணிக்கு எதிராகவே இருந்திருக்கிறது. உலகிலேயே பலம் வாய்ந்த அணியாக இருக்கும் இந்திய அணியை எதிர்த்து விளையாடி மேட்ச் வின்னராக இருந்தால், கிரிக்கெட் உலகம் அந்த வீரரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தைக் கொடுக்கும். தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறியுள்ளது. வெற்றிபெற வாழ்த்துக்கள்” எனக் கூறினார்.

சோயிப் மாலிக் (39) தனது அறிமுக சர்வதேச போட்டியில் இந்தியாவை எதிர்த்துத்தான் விளையாடினார். 2019ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய ஒருநாள் போட்டிதான், அவர் விளையாடிய கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியாகும். அதன்பிறகு அணியில் இடம் கிடைக்கவில்லை. எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் இடம்பிடிக்கும் பட்சத்தில் அத்தொடருடன் அவர் ஓய்வு அறிவிப்பார். அணியில் இடம் கிடைக்கவில்லை என்றால் உடனே ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்