கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டு காலத்தில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. மே 25ஆம் திகதி இரவு 11 மணி முதல் நேற்று (3) வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 160 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
25 முதல் 60 வயதிற்கிடைப்பட்ட ஆண்கள், பெண்கள் இரு பாலரும் இதில் உள்ளங்குகிறார்கள்.
இவர்கள் அனைவரும் கொழும்பு மற்றும் அதை அண்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள்.
இதேவேளை, பயணக்கட்டுப்பாட்டு காலத்தில் விபத்தில் சிக்கிய 1,339 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



