கிளிநொச்சியில் தாதியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு!

Date:

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நாடாளவிய ரீதியில் தாதியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலும் தாதியர்கள் இன்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர். இதன் போது அவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

அண்டிஜன் கடமை எங்களுக்கு மட்டுமா? உரிமைகளையும், சலுகைகளையும், அடிப்படை வசதிகளையும் வழங்க தாமதிக்காதே, நாம் நோயாளிகளுக்கான சேவையினை தடையின்றி ஆற்ற போக்குவரத்து வசதி செய்து கொடு, சுகாதார ஊழியர்களுக்குரிய
முககவசம், பாதுகாப்பான உடை என்பவற்றை தொடர்ச்சியாக வழங்கு, எமது கோரிக்கைகளுக்கு மதிப்பளி தாதியர்களை அடிமையாக்காதே எம்மையும் பேசவிடு, எமது கருத்துக்களுக்கு செவி மடு போன்ற வாசகங்கள் எழுப்பட்ட சுலோகங்களையும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட தாதியர்கள் ஏந்தியிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

சமிந்த விஜேசிறி எம்.பிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை

பதுளை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் திரொட்ஸ்கி, சட்டவிரோதமாக இடையூறு செய்தல்,...

மண்டைதீவு படுகொலை வழக்கு மீண்டும் செப்டம்பர் 22 வரை ஒத்திவைப்பு

மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்று (28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்