பிரிட்டனில் ஊரடங்கு தளர்த்தப்படாமல் போகலாம்; டெல்டா வைரஸ் பரவல்!

Date:

டெல்டா வைரஸ் பரவலால் பிரிட்டனில் ஊரடங்கு தளர்த்தப்படாமல் போகலாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டனில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. அண்மை வாரங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

ஜூன் 21ஆம் தேதியுடன் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படும் என அறிவிக்காப்பட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் பரவத்தொடங்கிய டெல்டா கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் பரவி வருவது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா வைரஸ் பரவலால் ஊரடங்கு தளர்த்தப்படாமல் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்டா வைரஸ் இங்கிலாந்தில் கெண்ட் பகுதியில்தான் பரவத் தொடங்கியது. தற்போதைய நிலையில், இங்கிலாந்தில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 60 விழுக்காட்டினர் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

போல்டன், பிளாக்பர்ன், கிர்க்லீஸ், பெட்ஃபோர்ட், பன்லீ, லெஸ்டர் உள்ளிட்ட பகுதிகளில் டெல்டா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் இளைஞர்களை அதிகம் பாதிப்பது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டுமெனவும், தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமெனவும் பிரிட்டன் அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்டா வைரஸ் பாதிப்பால் பிரிட்டனில் ஊரடங்கு தளர்த்தப்படாமல் போகலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக மோசடி: முல்லைத்தீவு செய்தியாளர் கைது!

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், முல்லைத்தீவு...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான...

கபிலசந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை

ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்