கொரோனா நோயாளி உயிரிழப்பு ; சிகிச்சை அளித்த டாக்டரை அடித்து உதைத்த உறவினர்கள்! (வீடியோ)

Date:

கொரோனா நோயாளி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், டாக்டரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஅசாம் மாநிலத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், சிகிச்சை அளித்த மருத்துவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அசாமின், ஹோஜாய் நகரில் உள்ள உதலி மாடல் மருத்துவமனையில், கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ஆத்திரத்தில் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

இதனால், மருத்துவமனை ஊழியர்கள் அவசரம் அவசரமாக மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். டாக்டர் சேனாபதி என்பவர், ஓர் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டார். ஆனால், அந்த கும்பல் கதவை உடைத்து டாக்டரை கொடூரமாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த டாக்டர், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

டாக்டர் சேனாபதி தாக்கப்பட்ட போது எடுத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு இந்த நிலைமையா என, சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து 24 பேரை கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அசாம் மருத்துவ சேவை சங்கம் வலியுறுத்தி உள்ளது. மேலும், சங்க உறுப்பினர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் புறநகர் சிகிச்சை பிரிவு சேவையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவசர சிகிச்சை பிரிவு, கொரோனா வார்டுகளில் மட்டும் வேலை செய்தனர். அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950...

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப்...

புதுக்குடியிருப்பு இளைஞனின் மரணத்துக்கு காரணம் கசிப்பா… அடியா?; சகோதரி சொன்னது உண்மையா?: பொலிசில் முறைப்பாடு!

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்